
மட்டக்களப்பு கொத்துக்குளத்து மாரியமன் ஆலைய உண்டியலை உடைத்த ஒருவரை ஆலைய காலவாளி மடக்கிபிடித்து பொலிசாரிடம் ஒப்படைப்பு
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு கொத்துக்குளத்து மாரியமன் ஆலையத்துக்கு மன்னால் வீதியில் அமைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முற்பட்ட ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (31) இரவு ஆலைய காவலாளி மடக்கிபிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த ஆலையத்தின் முன்னால் திருப்பெருந்துறை வீதியில் அமைக்கப்ப ட்டிருக்கும் ஆலைய உண்டியலை சம்பவதினமான நேற்று இரவு 10.30 மணியளவில் உடைக்கும் சத்தம் கேட்டு ஆலையத்தில் காவலுக்கிருந்த காவலாளி வீதிக்கு வந்தபோது உண்டியலை உடைக்கு நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரை மடக்கி பிடித்து பொலிசாரை வரவழைத்து ஒப்படைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் அவரை விசாரணையின் பின்னர் விடுவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.




