நாட்டிற்குள் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் பரவ ஆரம்பித்திருக்கின்றன.
இந்த நிலையில் அந்தத் தகவலில் எந்த உண்மையும் கிடையாது என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக்குறிப்பிட்டார்.
Advertisement
அத்துடன் வருகின்ற 27 நாட்களுக்கு அவசியமான எரிபொருள், களஞ்சியத்தில் இருப்பதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.