
தெஹிவளை சுமங்க வித்தியாலயம் அமைந்திருக்கும் இடம் இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் பரம விஞ்ஞானாதி பெளத்த நிறுவனத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட காணியாகும். ஆனால் தற்போது இதனை முஸ்லிம் பாடசாலையாக முன்னெடுத்துச் செல்ல கடந்த அரசாங்கம் அனுமதித்துள்ளது. அதனால் இந்த அரசாங்கம் இதனை தடுத்து பெளத்த நிறுவனத்துக்கு மீள ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் இது ஒரு இனப்பிரச்சினைக்கு காரணமாக அமையும் என சிங்ஹல ராவய அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.