கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து

பண்டாரவளை – ஹப்புத்தளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து ககாகொல்லை என்ற இடத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழந்ததுடன், காரின் சாரதி ஆபத்தான நிலையில் தியத்தலாவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், ஹப்புத்தளையில் இருந்து பண்டாரவளைக்கு வந்து கொண்டிருந்த காருமே மோதி விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்து குறித்து ஹப்புத்தளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *