ஆப்கான் நிலைவரம் குறித்து மோடி ஆலோசனை!

பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் குறித்து மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல், தீவிரவாதம், எதிர்காலத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உள்ளிட்டவைக் குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா, ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை காஷ்மீர் விடுதலைக்காக சர்வதேச ஜிகாத் நடத்தும்படி தீவிரவாத அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *