அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம்

மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இரண்டு முறைகளின் கீழ் உணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுதாக ´சதொச´ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அனைத்து சதொச கிளைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சதொச கிளைகளை திறந்து வைப்பதன் மூலம் கொரோனா கொத்தணியை ஏற்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுத்துரைப்பதாகவும் ´சதொச´ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *