06 சக்கர நாற்காலிகளை வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கிய வைத்தியர் . நிமாஷா

-வி.சுகிர்தகுமார்-
  பிரதேசத்தின் கோவிட் – 19 தொற்றைத் தொடர்ந்து  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியாவசிய தேவைப்பாடுகளை அறிந்து பலரும் தங்களால் இயன்ற உதவிகளையும் பங்களிப்புகளையும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்தியராகக் கடமையாற்றி வரும்  வைத்தியர்  . நிமாஷா  ஜேர்மனியில் வசிக்கும் தனக்கு அறிமுகமான ஒரு நண்பியூடாக 06 சக்கர நாற்காலிகளை வைத்தியசாலைக்கு நன்கொடையாக இன்று வழங்கி வைத்தார்.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எச்.எம். அசாத் தலைமையிலான குழுவினர் அதனைப் பெற்றுக் கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *