வட்டக்கச்சி கட்சன் வீதி தனிமைப்படுத்தப்பட்டது

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டக்கச்சி கட்சன் வீதியில் 4 நாட்களில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் (16) மேலும் 10 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதி நேற்று (16) இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் 14 நாட்களுக்கு இருக்கும் எனவும், மக்கள் நடமாடுவதை தவிர்க்குமாறும், வர்த்தக செயற்பாடுகளை நிறுத்துமாறும் சுகாதார தரப்பினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *