வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா

வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும், நகரசபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்புவிழா இன்று (17) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

பஜார் வீதியில் உள்ள நவாலியூர் சோமசுந்தர புலவரின் சிலையடியில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது விருந்தினர்களால் சோமசுந்தரபுலவரின் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் தொடர்பான சிறப்புரையினை ஆசிரிய ஆலோசகர் நிறைமதி நிகழ்த்தியிருந்தார்.

நிகழ்வில் நகரசபை செயலாளர், நகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுஅமைப்புகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *