ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 சந்தேநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக இன்று (வியாழக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு வழக்குகளில் இவர்கள் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *