இந்தியா திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 11.08.2021 முதல் உண்ணாவிரத போராட்டம்,
தற்கொலை முயற்சிகள், காத்திருப்பு போராட்டங்கள் என பல வழிமுறைகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் தொடர்சியாக இன்றைய தினமும் அமைதிவழிப்போராட்டத்தில் ஈடுபட்டருத்தனர்.
குறித்த போராட்டத்தின்போது அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
இப்போராட்டத்தின் மூலம் நாங்கள் அரசுக்கு தெரியப்படுத்த வந்த கருத்துக்கள் மறைக்கப்பட்டு உண்மைக்குப் புறம்பான தகவல்களை அரசு கொண்டு சேர்க்கின்றனர்.
இதன் மூலம் எமக்கு கிடைக்க வேண்டிய நீதி புதையுண்டு போகிறது. எம்மால் இயன்ற அளவு பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டும் அரசிடம் எங்கள் நிலைமையை நேரடியாக சொல்ல முடியாது தலை குனிந்து நிற்கின்றோம்.
கடவுள் கொடுக்கும் ஆயுட்காலம் 50 வரை. அதில் இங்கு அரைப் பகுதி அழிந்து போகிறது. மிகுதி எதற்கு வாழவேண்டும் எனத் தோன்றுகிறது. கடவுள் கொடுத்ததை உங்களிடம் கெஞ்சிக் கேட்கின்றோம்.எங்கள் வாழ்க்கையை திருப்பிக் கொடுங்கள்.
இவ்வுலகில் யாரும் கொடுக்க விரும்பாத தண்டனை “மன்னிப்பு” அதை எங்களுக்கு கொடுத்து எங்கள் குடும்பங்களின் கண்ணீரை துடைக்க உதவுங்கள்.
தலை குனிந்து உங்களிடம் கேட்கக் கூடாத பெரும் பிச்சையை உங்களிடம் கேட்டு நிற்கின்றோம். எங்கள் வாழ்க்கையை எங்களுக்கு பிச்சையாக போடுங்கள்
என தெரிவித்து வாசகங்கள் எழுதி அட்டையுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.