யாழில் அன்டிஜன் பரிசோதனை – கைதடி முதியோர் இல்லத்தில் 72 பேர் உட்பட 106 பேர் அடையாளம்!

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 72 பேர் கைதடி முதியோர் இல்லத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இன்று 103 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு தோற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்ட 34 பேரில் ஒரு பகுதியினரை வீடுகளில் பராமரிக்கவும் மற்றொரு பகுதியினரை கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் கண்காணிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் முதியவர்கள், பணியாளர்கள் 156 பேரிடம் இன்று அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அவர்களில் 68 முதியவர்கள் மற்றும் 4 பணியாளர்கள் என 72 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அவர்களை கைதடி அரச முதியோர் இல்லத்தில் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *