மீண்டும் ஒரு கொவிட் அலை உருவாகும் அபாயம்! சுகாதார பிரிவு எச்சரிக்கை!

டெல்ரா திரிபு காரணமாக மேலும் ஒரு கொவிட் 19 அலை உருவானால், அது நாட்டில் மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் மரண வீதமும் அதிகரிக்ககூடிய சாத்தியங்கள் உள்ளன.

எனவே, டெல்ரா வைரஸ் திரிபு குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன், சுகாதார வழிகாட்டல்களையும் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *