யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
மேலும் கச்சாய் கொடிகாமத்தைச் சேர்ந்த 29 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் என்பவரே உயிரிழந்தார். அவர் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வந்தார்.
நேற்று தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக தனது முகமுகநூலில் பதிவிட்டு இருந்தார்.
வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையிலே திடீரென சுவாசச் சிரமம் ஏற்பட்ட நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.
இவரின் இறுதிப் பதிவு எல்லோரையும் கலங்கவைப்பதோடு இறப்புச் செய்தியை கேட்ட அனைவரும் தமது இரங்கரளை தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



