இன்றயதினம் ஆரம்பமான அணையா தீபம் போராட்டத்திற்கு எதிர்வரும் புதன் கிழமை தமது பூரண ஒத்துழைப்பை தருவதாக வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் எமது தமிழினத்திற்கு திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனவழிப்பின் முக்கிய ஆதரமான செம்மணி மனித புதை குழி எச்சங்கள் என சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறும் இந்த மூன்று நாள் போராப்பட்டத்தில் பங்கு கொள்வது ஒவ்வொரு தமிழரின் வரலாற்று கடமை என கருதி வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கம் தம்மால் இயன்ற பூரண ஒத்துழைப்பை தருவதாக தலைவர் மற்றும் செயளாலர் கூறியுள்ளனர்.




