
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில், பயங்கரவாதிகள் சத்திய பிரமாணம் செய்யும் வீடியோ காட்சிகளை ஐ.எஸ். அமைப்பினருக்கு அனுப்பி உரிமை கோரச் செய்ததாக கூறப்படும் சம்பவத்தை மையப்படுத்தி கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் வரையில் தடுப்பில் இருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சின்ன சஹ்ரான் (பொடி சஹ்ரான்) எனும் பெயரால் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அறியப்படும் பஸ்லூர் ரஹ்மான் மொஹமட் சஹ்ரான் மீண்டும் கடந்தவாரம் கைது செய்யப்பட்டார்.