
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியைத் தோண்டத் தோண்ட அதிர்ச்சியூட்டும் அத்தாட்சிகளே வந்தவண்ணமுள்ளன. கடந்த சில நாட்களாக சிறுவர்களின் எலும்புக் கூடுகளும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் எச்சங்களும் மீட்கப்பட்டமை இந்த மனிதப் புதைகுழிகளின் பின்னால் மறைந்திருக்கும் ஈவிரக்கமற்ற அரக்கர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவுள்ளன.