இலங்கை மகளிர் பணியகத்தின் ஏற்பாட்டில் விசேட செயலமர்வு!

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் கீழ் செயல்படும் இலங்கை மகளிர் பணியகத்தின் (Sri Lanka Women’s Bureau) ஏற்பாட்டில், கடந்த 8ஆம் திகதி பெண்களின் பொருளாதார மற்றும் சமூக அதிகாரமளிப்புக்கான உத்திகள் மற்றும் நிறுவன கட்டமைப்புகளை மையமாகக் கொண்டு ஒரு செயலமர்வு பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது.

இந்த அமர்வின் போது, அமைச்சும் மகளிர் பணியகத்தினரும், தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் நிறுவன அமைப்புகளை விரிவாக விளக்கியதோடு, அதன் செயல்திறனை பற்றியும் கலந்துரையாடினர்.

இதன்போது, மாவட்ட மட்டத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்களை எடுத்துரைப்பதற்கும், உரையாடலுக்குரிய தலைப்புகளுடன் தொடர்புடைய புதிய யோசனைகளை முன்வைப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், குழுக்களின் துணைத் தலைவர் கௌரவ ஹேமலி வீரசேகர, மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் துணை அமைச்சர் கௌரவ டாக்டர் நாமல் சுதர்ஷன, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாசா, மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினருடன் சேர்ந்து பிற நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது “பெண்களுக்கு ஆதரவளித்து, அவர்களை அதிகாரமூட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்ட இத்தகைய அர்த்தமுள்ள நிகழ்வுக்கு அழைக்கப்பட்டதற்காக” எதிர்க்கட்சித் தலைவர் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், இம்மாதிரியான முயற்சிகளில் ஒருங்கிணைந்த பங்கேற்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *