நான் போகிறேன் :என்ட வேலையை நீ பார்!- நடுவீதியில் இளைஞனுக்கு அதிரடி வகுப்பெடுத்த பொலிஸ்!

போக்குவரத்து நடைமுறைகளை மீறி பயணித்த இளைஞரை அழைத்து நடுவீதியில் படிப்பித்த பொலிஸாரின் செயல் சமூக வைலத்தளங்களில் வைரலாகி வருகிறது 

கதிர்காமம் பகுதியில் உள்ள பிரதான வீதி ஒன்றில், சனநெரிசல் அதிகமாக இருந்துள்ளது. அப்போது போக்குவரத்து பொலிசார் தமது கடமைகளை செய்துகொண்டிருந்தனர். 

அந்தவகையில் ஒரு போக்குவரத்து பொலிசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்தி வாகனங்களை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர்கள் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்து பிரதான வீதிக்குள் நுழைந்தனர்.

இதனால் ஆத்தரமடைந்த போக்குவரத்து பொலிசார், அதில் ஒரு இளைஞனை அழைத்து நடுவீதியில் நிறுத்தி “எனது பணியை நீ பார் என சைகையால் கூறினார். குறித்த காட்சி பிரதான வீதியில் சென்ற ஒரு வாகனத்தில் பதிவாகியிருந்தது. இந்த காணொளியை பலரும் பகிர்ந்து சிரித்து வருகின்றனர்.

காணொளியை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://web.facebook.com/share/v/1B9ToJve5X/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *