நாட்டில் கொரோனாவால் 11,700 பொலிஸார் பாதிப்பு; 28 பேர் பலி

கொரோனா ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் போது நாட்டின் உள்ளக பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், 11,700 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வீரசேகர கூறியுள்ளார்.

கொரோனா காலத்தில் கூட போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகள் தலைதூக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அமைச்சர்
குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பணியில் இருக்கும் போது ஒரு பொலிஸ் அதிகாரி இறந்தால், அவரின் பதவிக்காலம் முடியும் வரை முழு சம்பளத்தையும் அவரது குடும்ப உறுப்பினருக்கு வழங்குவதற்காக, அமைச்சரவை பத்திரமொன்றை தயாரிக்க அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *