மயாணத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா

மன்னார் பேசாலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட றோமன் கத்தோலிக்க மயாணத்திற்கு பின் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சா மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவுக்கு(DCDB)கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி மற்றும் மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி C.I.குமுதுகுமார,உப பொலிஸ் பரிசோதகர் .ராமநாயக தலைமையிலான அணியினரே மேற்படி கேரளகஞ்சாவினை கைப்பற்றி உள்ளனர்.

பேசாலை மயான பகுதியின் பின்புறம் உள்ள காணி ஒன்றில் சூட்சமமான முறையில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த மேற்படி 51கிலோ 250கிராம்,கேரளா கஞ்சா போதைப்பொருளே பொலிஸாரினால் கைப்பற்றபட்டுள்ளது

மேற்படி கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் கடத்தலுடன் சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *