அவசர கால நிலை அறிவிப்பு தொடர்பாக விக்னேஸ்வரன் அவர்களின் கருத்து

மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்திற்கு முக்கிய படி என அவசர கால நிலை அறிவிப்பு தொடர்பாக விக்னேஸ்வரன் அவர்கள் கடிதம் ஒன்றின் மூலம் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார் அதில் மேலும் தெரிவித்ததாவது

2243/1 அதி விசேட வர்த்தமானி மூலம் கொவிட் 19ஐக் காரணம் காட்டி அவசரகால நிலையை
அறிவித்துள்ளார் ஜனாதிபதி அவர்கள். உண்மையில் இவ்வாறான சந்தர்ப்பத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டம் அனர்த்த முகாமைத்துவச்சட்டம். அதன் கீழ் ஒரு செயலணியை நிறுவி மருத்துவ ஆலோசனைகளுக்கேற்ப நடவடிக்கை எடுக்க
வேண்டும். இதிலிருந்து ஜனாதிபதி ஆரம்பத்திலேயே தவறிவிட்டார். பல குற்றங்களை அவர்
புரிந்துள்ளார்.

  1. இவ்வாறான அனர்த்த முகாமைத்துவ செயலணியை இதுவரையில் நியமிக்காமை.
  2. கொவிட் 19க் கெதிரான நடவடிக்கைகளை துறைசார் நிபுணர்களை வைத்து இதுவரையில்
    கட்டுப்படுத்தாதது.
  3. ஆயுதமேந்தி மக்களைக் கொல்லும் இராணுவத்தை கொவிட்டைக் கட்டுப்படுத்த நியமித்தமை.
  4. கொவிட்டைக் காரணம் காட்டி அவசரகால நிலையை ஏற்படுத்தி சர்வதிகாரத்திற்கு வித்திட்டமை.
    ஏற்கனவே பயங்கரவாத் தடைச்சட்டம் அமுலில் உள்ளது. அடுத்து கொவிட் 19ஐக் கட்டுப்படுத்த இராணுவத்தை அழைத்து அவர்கள் எங்கும் வியாபித்திருக்கின்றார்கள். மூன்றாவதாக அவசரகாலச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்.
    தமக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்திற்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது. இராணுவம் என்றால் என்ன என்பதை இனி சிங்கள மக்கள் அறிந்து கொள்வார்கள் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *