
பொத்துவில் அறுகம்பே பகுதியில் இயங்கி வந்த இஸ்ரேலியர்களின் சபாத் இல்லம் பூட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாஸித் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைவாகவே சவாளை பிரதேசத்தில் P/05 கிராம பிரிவில் இயங்கிக் கொண்டு வந்த இஸ்ரவேலர்களின் வணக்கஸ்தலமான சபாத் இல்லம் கடந்த 10 ஆம் திகதியன்று பூட்டப்பட்டுள்ளது.




