தீர்வு விடயத்தில் கட்சி ரீதியில் பிளவுபட்டு செயற்படுவது பலவீனப்படுத்திவிடும் – மாவை

தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் தாங்கள் பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது பலவீனப்படுத்திவிடுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தமது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அது பொறுப்பற்ற ரீதியில் முன்வைக்கப்படும் பிரசாரமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். தங்களது இலக்கை அடைய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ள கொவிட்-19 பரவல் நிலையில், இவ்வாறான கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *