நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக, பேரிடர் சூழ்நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் மற்றும் உதவிகளை வழங்க இலங்கை பொலிஸார் பிரத்யேக தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், தற்போதைய அவசரகாலத்தின் போது சரியான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ்மா அதிபரின்மேற்பார்வையின் கீழ் ஒரு சிறப்பு செயல்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.







