அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் விமானத்திற்கு வான்வழி அனுமதியை புது டெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. 

இந்தக் குற்றச்சாட்டு “அபத்தமானது” என்றும் தவறான தகவல்களைப் பரப்பும் முயற்சி என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இது தொரடர்பில் கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தக் கூற்று இந்தியாவுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களை திணிப்பதற்கான மற்றொரு முயற்சி என்று கூறினார்.

மேலும் நெருக்கடியின் போது இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதை வலியுறுத்தினார்.

MEA spokesperson Randhir Jaiswal. FileMEA spokesperson Randhir Jaiswal. FileMEA spokesperson Randhir Jaiswal. File

இந்திய வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி, பாகிஸ்தானிடமிருந்து விமான வான்வழி அனுமதி கோரும் கோரிக்கை 2025 டிசம்பர் 1 அன்று மதியம் 1:00 மணியளவில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு கிடைத்தது. 

அரசாங்கம் அதே நாளில் கோரிக்கையை செயல்படுத்தி, முன்மொழியப்பட்ட பயணத்திட்டத்தைப் பின்பற்றி 4:30 மணிக்கு அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சின் அறிக்கையுடன், இந்த விரைவான ஒப்புதல் பாகிஸ்தானின் தாமதக் கூற்றுக்கு நேரடியாக முரணானது என்று இந்தியா சுட்டிக்காட்டியது.

முன்னதாக, பாகிஸ்தான் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு இந்திய விமான நிறுவனங்கள் தொடர்ந்து தடை விதித்துள்ள போதிலும், இலங்கை விடயத்தில் பாகிஸ்தானின் கோரிக்கை வெறும் நான்கு மணி நேரத்தில் செயல்படுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் எடுத்துரைத்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த முடிவு முற்றிலும் மனிதாபிமான நடவடிக்கை என்று விவரிக்கப்பட்டது.

பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை இந்திய அதிகாரிகள் விமர்சித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை, தவறாக வழிநடத்தும் தன்மை கொண்டவை என்றும், விமானப் போக்குவரத்து அல்லது போக்குவரத்துக்கான அனைத்து கோரிக்கைகளும் நிறுவப்பட்ட நடைமுறைகள் மற்றும் சர்வதேச விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படுகின்றன என்றும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவுவதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *