வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பூவரசந்தீவில் நடமாடும் சேவை!

 

​வெள்ள அனர்த்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவு கிராமத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நடமாடும் சேவை ஒன்று இன்று நடைபெற்றது.

​கிண்ணியா பிரதேச மக்களுக்குச் சேவை செய்வதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ள கிண்ணியா ஜெம்மியதுல் உலமா சபையினால் இந்த நிவாரண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

​இந்த நடமாடும் சேவையின் ஊடாக, வெள்ள அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நான்கு முக்கிய சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

​இலவச மருத்துவ சேவை,பொதுச் சுகாதார சேவை, மின்சார சேவை, குடிநீர் சேவை ஆகியன 

​வெள்ளத்தால் சுகாதார ரீதியாகவும், உட்கட்டமைப்பு ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி தீர்வை வழங்கும் நோக்கில், இந்த சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன.

​இந்தச் சேவைகளை வழங்குவதற்காக, பல துறைசார் நிறுவனங்களின் ஊழியர்கள் ஒன்றிணைந்து பங்களிப்பு வழங்கினர். 

கிண்ணியா பிரதேச வைத்தியர்கள், குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய ஊழியர்கள், இலங்கை மின்சார சபை ஊழியர்கள், மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் ஆகியோர் தங்கள் அரிய சேவையினை மனமுவந்து வழங்கினர்.

​கிண்ணியா ஜெம்மியத்துல் உலமா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிவாரண முகாமில், பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, மருத்துவ மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பெற்று நிவாரணங்களை அடைந்தனர்.

​இந்த மக்கள் சேவை நிகழ்வில், கிண்ணியா ஜெம்மியத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷேஹ் கலாநிதி ஏ. ஆர். எம். நசார் அவர்கள் தலைமையிலான உலமா சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அத்துடன், கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எஸ். எம். கனி, குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம். எச். எம். ரிஸ்வி உள்ளிட்ட முக்கிய அரச மற்றும் சுகாதார அதிகாரிகளும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

​வெள்ள அனர்த்தத்தின் பின்னர் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதைச் சுலபமாக்கும் நோக்கில் இந்த நடமாடும் சேவை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *