கொரோனாவுக்கு பலியான மற்றுமொரு வைத்தியர்

ஆனமடுவ சுகாதார திணைக்களத்தின் மேலதிக மருத்துவ அதிகாரியான வைத்தியர் வசந்த ஜயசூரிய கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் கடவத்தையை வசிப்பிடமாக கொண்டவர்.

நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சில காலம் பணியாற்றி வந்த ஜெயசூர்ய, பின்னர் ஆனமடு சுகாதார அலுவலர் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டார்.

மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சுமார் 10 நாட்கள் அங்கொட கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *