நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும – தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று தையிட்டிக்கு விஜயம்!

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு விஜயம் செய்துள்ளனர்.

பௌத்த பிக்குகள் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக நாளைய தினமும் பாரய போராட்டமொன்றுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த போராட்டமொன்றில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த வகையில் குறித்த பௌத்த பிக்குகள் குழுவானது இன்றைய தினம் அங்கு விஜயம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *