வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்படும் “சத்மஹால் சதஹம் மந்திரய” கட்டிடத்திற்கான மங்கள அடிக்கல் நாட்டும் விழா பிரதமரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள “சத்மஹால் சதஹம் மந்திரய” தர்ம மாளிகைக்கான அடிக்கல் நாட்டும் புண்ணிய உற்சவம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்கேற்புடன் நேற்றையதினம் மிக விமர்சையாக நடைபெற்றது.
துருது பௌர்ணமி போயா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது, மகா சங்கத்தினரின் ‘செத் பிரித்’ பாராயணத்துடன் ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து, கௌரவப் பிரதமரினால் மங்கள அடிக்கல் நாட்டப்பட்டு, ஏழு மாடி தர்ம மாளிகையின் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பௌத்த மரபுகளைப் பாதுகாத்து, வருங்கால சந்ததியினருக்குத் தர்ம அறிவையும் ஆன்மீக வழிகாட்டலையும் வழங்கும் ஒரு மையமாக இந்த “சத்மஹால் சதஹம் மந்திரய” அமையவிருக்கின்றது.
இந்நிகழ்வில் கோட்டை ரஜமகா விகாராதிபதி அளுத் நுவர அனுருத்த நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, பிரதேச அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பிரதேச வாழ் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.






