வெனிசுலா மீதான அமெரிக்க தலையீட்டைக் கண்டித்து இன்று கொழும்பில் போராட்டம்!

வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து, முன்னணி சோசலிசக் கட்சி இன்று (05) கொழும்பில் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளது.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதகரத்தின் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

அங்கு வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்தவும், லத்தீன் அமெரிக்காவில் பரந்த தலையீடுகளை நிறுத்தவும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டத்திற்கு முன்னதாக சமூக ஊடகங்களில் பரவிய சுவரொட்டிகள், அமெரிக்கா ஏகாதிபத்தியக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும், வெனிசுலாவில் அரசியல் விளைவுகளை பாதிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *