பாண்டியன் குளம் – கரும்புள்ளியான் பகுதியில் நேற்று (17) இரவு இனந்தெரியாத நபர்கள் நடாத்திய வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அதே இடத்தை சேர்ந்த 43 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையொருவரே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைக்களை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.