இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 ஆயிரத்து 725 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  4 இலட்சத்து 56 ஆயிரத்து 126 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 2 ஆயிரத்து 310 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 82 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *