முல்லைத்தீவில் வாள் வெட்டு தாக்குதல்- ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பாண்டியன் குளம், கரும்புள்ளியான் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கயஸ்வாகனம் மற்றும் வீட்டுப் பொருட்களும்  சந்தேகநபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யாதவராசா (43 வயது) என்பவரே படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *