முல்லைத்தீவில் நள்ளிரவு வீடொன்றில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதல்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தாக்குதல்களினால் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனமும் பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யாதவராசா (43) என்பவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைக்களை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *