
கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 4.8ஆக இருந்த வேலையின்மை தற்போது 5.5 வீதமாக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்த இலங்கையர்கள் பலரும் நாட்டுக்கு வந்த காரணத்தினால் இந்த வீத உயர்ந்துள்ளது என கூறப்படுகிறது.
இதேவேளை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கற்றல் நடவடிக்கைக்காக செல்லும் இலங்கையர்களுக்கு தற்போது புது பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது.
சைனோபார்ம் மற்றும் ஸ்புட்னிக்-வி ஆகிய கொவிட் தடுப்பூசி பெற்றவர்களை ஐரோப்பிய நாடுகள் நிராகரிக்கும் நிலைமை உருவாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.