நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோய் பரவலானது தற்போது அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் ஊடக பேச்சாளர் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழைக்காரணமாக டெங்கு நுளம்புக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரை டெங்கு நோய் காரணமாக 7 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் 15 ஆயிரத்து 272 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 4 ஆயிரத்து 600 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.

அதற்கு அடுத்தப்படியாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி அங்கு 3 ஆயிரத்து 366 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *