அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையினை குறைப்பது எமது முதற்கட்ட செயற்பாடாக அமையும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சருக்கும், உள்ளூராட்சிமன்ற பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்று வேளையும் உணவு பெற்றுக் கொள்ள வசதியில்லாத மக்கள் வாழ்கிறார்கள்.
இவர்கள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பல்வேறு எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்கள் ஆட்சியதிகாரத்தை கையளித்துள்ளார்கள்.
ஆகவே அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைப்பதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என தெரிவித்தார்.