இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றால் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 779 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 16 பெண்களும் 30 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.