
மெதிரிகிரிய ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்கள் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளன என்று அப்பகுதி சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் ,ஆடைத்தொழிற்சாலையின் 4 பணியாளர்களுக்கு முதலில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும் அதன்பின்னர் அடுத்தடுத்து நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் இதுவரை 124 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.