கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை குறித்து இன்றையதினம் விவாதம்!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்றைய தினம் (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள குறித்த பிரேரணை மீதான விவாதம் இன்று முற்பகல் 10 மணிமுதல் மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது.

அத்துடன், நாளைய தினமும் விவாதம் இடம்பெற்று நாளை மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சியின் 44 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்படும் முதலாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *