
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரு நாள் விவாதத்துக்காக பாராளுமன்றம் இன்றும் (19) நாளையும் (20) கூட உள்ளது.
இரண்டு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது. வாய்மூல விடைக்கான வினாக்கள் இன்றி முதல் நாளும், மறு நாள் காலை 10 மணியிலிருந்து 11 மணிவரையில் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இருநாள் விவாதிக்கப்பட்டு 20ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.