பின்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பின்லாந்தில் ஒரு இலட்சத்து 156பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 99ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில் இதுவரை 978பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 180பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு பதிவாகவில்லை.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 53ஆயிரத்து 178பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 46ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *