
நாட்டை 13 ஆம் திகதி தறக்க முடியும் என நம்புகின்றேன் – வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன

நாட்டின் தற்போதைய சூழ் நிலையில் நாட்டை எதிர்வரும் 13 ஆம் திகதி திறக்க முடியும் என நம்புகின்றேன் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நரம்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 13 க்கு பின்னரும் நாட்டை முடக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை முன்வைத்துள்ளனர். இல்லை திறக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது விடயத்தில் உங்கள் கருத்து என்ன என ஊடகங்கள் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.