வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த தீர்மானம்

நாட்டில் நீதிமன்ற விசாரணைகள் தாமதமாவதைத் தடுப்பதற்கு நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நீதிமன்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நீதிபதிகளின் எண்ணிக்கை 112 ஆகவும், நீதிமன்றங்களின் எண்ணிக்கை 125 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழக்குகள் கூடுதலாக தேங்கியிருப்பதனால் இவற்றை விரைவில் விசாரித்து அதன் எண்ணிக்கையை குறைப்பது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவின் அறிக்கை நீதித்துறை அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *