மணல் உரிமம் வழங்குவதற்கான புதிய வழிமுறை?

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் சக அரசாங்க அதிகாரிகளுடனான விசேட சந்திப்பில் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (10) காலை கடத்தல் காரர்களிடமிருந்து மணல் கடத்தலை கட்டுப்படுத்த மற்றும் கூட்டுறவு சங்கங்களை நிறுவுவதற்கு ஒரு நிலையான திட்டம் தயாரிக்கப்படும் என்று கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் தற்போதுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான முடிவுகளை எடுக்க ஆளுநரின் தலைமையில் ZOOM தொழில் நுட்பம் மூலம் குறித்த கூட்டம் நடைபெற்றது.

மேலும் தெரியவருவது,

தற்போது நாட்டிற்கு தேவையான மணலின் அளவு பொலன்னறுவை மாவட்டத்துக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். பல முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எழுந்திருப்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் 300 அனுமதிப் பத்திரங்கள் மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு மட்டும் 1300 உரிமங்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

எதிர்காலத்தில் இந்த நிலையை மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உரிமம் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம், மிகவும் ஊழல் நிறைந்த அதிகாரிகள் தனது மாகாணத்திற்கு வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.

அரசியல் அதிகாரிகளின் குறிப்பிட்ட ஆதரவுடன் இத்தகைய அதிகாரிகள் அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் ஆளுநர் கூறினார். ஒரு குழு மூலம் உரிமம் வழங்குவதே இதற்கான சிறந்த தீர்வு, என்றார்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு குறித்து நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தொடர்பில் இது எந்த வெளிநாட்டிற்கும் மணல் அனுப்பப்படவில்லை என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான மணல் இருப்பு இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

கூட்டத்தில் சுற்றுச்சூழல் திணைக்களம், வனத்துறை, புவியியல் மற்றும் சுரங்க பணியகம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்கள், மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *