மட்டு போதனா வைத்தியசாலைக்கு தொலைநோக்கி நுண்ணோக்கி கருவி அன்பளிப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இனங்க ஏறக்குறைய மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தொலைநோக்கி நுண்ணோக்கி கருவி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

என்.கே.டி.ரட்ணம் குறூப் கம்பனியின் தலைவரும் பிரபல தொழில் அதிபருமான பி.நல்லரெட்ணம் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிளளை கருணாகரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண்ணுயினர் துறை விசேட வைத்திய நிபுவணர் பி.தேவகாந்தன், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மன்னார் போதனா வைத்தியசாலைக்கு 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிசிஆர் இயந்திரம் ஒன்றை வழங்கியதாகவும் தொழில் அதிபர் நல்லரெட்ணம் இதன்போது தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *