மேலதிக கொடுப்பனவுகளை வழங்கக்கோரி மன்னார் பொதுவைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் மேலதிக கொடுப்பனவுகளை வழங்கக்கோரி இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலை வளாகத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் 60 மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக பணியாளர்கள் மேற்கொண்ட நேரங்களுக்கான கொடுப்பனவை இதுவரை காலமும் தமக்கு வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடையம் தொடர்பாக பல தடவைகள் எழுத்து மூலமாகவும் தொழிற்சங்க அடிப்படையிலும் வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலதிக நேர கொடுப்பனவை வழங்கக்கோரி மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்த நிலையிலேயே குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாக போராட்டகாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம் சரியான தீர்வு கிடைக்காத சந்தர்ப்பத்தில் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *