பயணக்கட்டுப்பாடு தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்

திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகளுக்காக மாகாண எல்லைகளை கடக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணத்திற்காக உரிய ஆவணங்களை சமர்பித்ததன் பிற்பாடு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்வின் போது மணமக்கள் இரண்டு மாகாணங்களில் இருப்பின் ஒரு தரப்பினருக்கு அடுத்த மாகாணத்திற்கு பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மணமக்களின் பெற்றோருக்கு வாய்ப்பளிக்கப்படுவதுடன் வேறு எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply