யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!

கஹடகஸ்திகிலிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவௌ பகுதியில் யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் இந்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்தோடு ஈத்தல்வெட்டுனுவௌ – கொக்கபே அணைக்கட்டு பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 54 வயதான ஒருவரே மரணித்துள்ளார்.

அத்தோடு உயிரிழந்தவரின் சடலம் தற்போது கஹடகஸ்திகிலிய பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹடகஸ்திகிலிய காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *